திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மண்டு கருப்பசாமி கோவில் முன்பு அமைந்துள்ள காலி இடத்திற்காக கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துகளிடையே பல வருடங்களாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தக் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர்.
திண்டுக்கல் : ஒரே சாதியை சேர்ந்தவர்களின் மத பிரச்சனையால் இரண்டாவது நாளாக தொடரும் 144 தடை உத்தரவு!