“திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது!” – மதுரையில் மோடி |”This has happened because of the unfairness of the DMK government!” – Modi in Madurai

Spread the love

மதுரைக்கு திமுகதான் கொள்ளை ரக அரசியலை அறிமுகப்படுத்தியது. சுத்தம், சுகாதார அளவில் மதுரையை தரைமட்ட அளவிற்கு அவர்கள் கொண்டு சென்றார்கள். ஊழல் காரணமாக மதுரை மேயரே பதவியை துறக்க நேர்ந்தது. இதுதான் அவர்களுடைய மாடல். தமிழ்நாடு ஒரு கரைப்பகுதி மாநிலம். இங்கு அளவற்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், திமுகவும், காங்கிரஸும் 2014-ம் ஆண்டிற்கு முன்பு கூட்டாட்சி நடத்தியபோது ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தார்கள். கடந்த 12 ஆண்டுகளில் 12,000 கோடி மதிப்பிலான 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

அதனால் பல வேலை வாய்ப்புகளும், பொருளாதார சந்தர்பங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்கும் மேலாக பாம்பன் பாலம் நிலையாக இருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அது மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த திமுகவும் காங்கிரஸும் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் வேலையில் வேகத்தைக் காட்டினோம். அதனால் இப்போது ரயில்கள் வேகமாக பயணிக்க முடிகிறது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *