2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன.
பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி என கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திமுக தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வரும் 22-ம் தேதி ஆரம்பிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைப் பொறுத்தவரை 2021 தேர்தலை விட 2026 தேர்தல் திமுக-விற்கு ஒரு பெரிய சவாலாகத்தான் இருக்கும்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளை லாவகமாகக் கையாண்டு, அதிக இடங்களில் போட்டியிட்டது.
173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, காங்கிரஸிற்கு 25 இடங்களைக் கொடுத்து பிற கூட்டணிக் கட்சிகளுக்கு 36 தொகுதிகள் ஒதுக்கியது.