திமுக நிர்வாகி கொலை:“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு?” – பாமக அன்புமணி கேள்வி | DMK Party Member murdered: “What is the security for the people of Tamil Nadu?” – Anbumani questions |

Spread the love

திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கு மட்டும்தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி பா.ம.க. நிர்வாகிகளை ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் கைது செய்து பொய் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பழிவாங்கத் துடிப்பதில் காட்டும் அக்கறையையும், செலவிடும் நேரத்தையும் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை செலவிட்டிருந்தால் இத்தகைய படுகொலைகளைத் தடுத்திருக்க முடியும்.

ஆனால், திமுக காவல்துறை அதற்குத் தயாராக இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கிக் கலாசாரம் தலைவிரித்தாடுகிறது என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன்.

அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில்தான் சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *