இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும், விதிகளை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை மனுவாக தாக்கல் செய்யப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.