திமுக ராஜ்ய சபா சீட்… கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தேர்வும் பின்னணியும்! | Why DMK Choose Constantine ravindran as Rajya sabha MP candidate?

Spread the love

ராஜ்ய சபா எம்.பி் தேர்தலுக்காக தி.மு.க சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். இதில் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது பேசுபொருளாகியிருக்கும் நிலையில் அதன் பின்னணி குறித்து விசாரித்தோம்.

தமிழகத்தில் தி.மு.க சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை மற்றும் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

தி.மு.க வசமுள்ள 4 இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்கும், தே.மு.தி.க-வுக்கும் ஒதுக்கிய நிலையில் மீதமுள்ள இரண்டை திருச்சி சிவாவுக்கும், செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருக்கும் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கும் கொடுத்துள்ளது தி.மு.க தலைமை.

மு.க ஸ்டாலின்

மு.க ஸ்டாலின்

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், “ராஜ்ய எம்.பியாக பொறுப்புவகித்த எங்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதில் யாருக்கும் பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால், கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கும் வாய்ப்பு கிடைத்தது பலரது புருவத்தை உயர்த்த செய்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *