திராவிட மாடல் ஆட்சி: வரலாறு காணாத வகையில் திருக்கோயில் திருப்பணிகள்! – அறநிலையத்துறை

Spread the love

இத்திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ரூ.120 கோடி செலவிடப்படுவதோடு, சுமார் 3.65 கோடி பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.

தங்க முதலீட்டுத் திட்டம்

இருக்கன்குடி, பெரியபாளையம், சமயபுரம், பழனி, திருவேற்காடு, மாங்காடு மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட 21 திருக்கோயில்களில் பயன்பாடற்ற பொன் இனங்கள் மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதியரசர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு 1,074 கிலோ 123 கிராம் தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டு வட்டியாக 17 கோடியே 81 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் திருக்கோயில்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

ஆன்மிகப் பயணம்

60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9.94 கோடி அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 4,015 பக்தர்களும், இராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கு 1,520 பக்தர்களும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு 3,004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு 3,014 பக்தர்களும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.40,000-லிருந்து ரூ.1 இலட்சமாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.10,000-லிருந்து ரூ.30,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள்

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்குச் 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை மற்றும் பட்டு வேட்டி உட்பட ரூ.70,000/- மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் திருக்கோயில்களின் சார்பாக 2,800 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 165 மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.335 கோடியில் ஒருகால பூசை திட்டம்

ஒருகால பூசை கூடச் செய்திட முடியாத, நிதிவசதி இல்லாத 12,959 திருக்கோயில்களுக்கான வைப்பு நிதி தலாரூ.1 இலட்சத்திலிருந்து, ரூ. 2 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், 5,041 திருக்கோயில்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டன. தற்போது ஒருகால பூஜைத் திட்டத்திலுள்ள 19,000 திருக்கோயில்களுக்கும் வைப்பு நிதி ரூ.2.50 இலட்சமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்திற்காக மட்டும் இதுவரை ரூ. 335 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

ஒருகால பூசை திட்டத்தில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஊக்கத் தொகை ரூ.1,500/–ஆக உயர்த்தப்பட்டு 19,000 திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக 1,500 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 

19,000 ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களுக்கு ரூ.8.58 கோடி செலவில் பூசை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *