இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படும் நிலையில், 30 க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்து மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பிரயாக்ராஜுக்கு வந்த பக்தர்கள், உங்களுக்கு அருகிலுள்ள கங்கை ஆற்றில் நீராடுங்கள். திரிவேணி சங்கமம் நோக்கிச் செல்ல முயற்சிக்காதீர்கள்.
நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஏற்பாடுகளைச் செய்வதில் ஒத்துழைக்க வேண்டும். மேலும் எந்த வதந்திகளுக்கும் கவனம் செலுத்த வேண்டாம்” எனப் பதிவிட்டுள்ளார்.