முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, திருவிழா மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள்.

திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கடற்கரையில் குடும்பத்துடன் புனித நீராடிவிட்டு முருகனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கடல், அவ்வப்போது சீற்றத்துடனும், அடிக்கடி சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கியும் காணப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கரைப் பகுதியில், சுமார் 7 அடி உயரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டது.