திருத்தணி:“மக்கள் வைரல் வெறி பிடித்திருக்கிறார்கள்” – நடிகர் சரத்குமார் விமர்சனம்| “People are obsessed with going viral,” – Actor Sarathkumar’s criticism

Spread the love

திருத்தணியில் வடமாநில இளைஞர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை அதிரச் செய்தது.

இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்கள் கண்டனத்தையும், கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில், நடிகரும், பா.ஜ.க. தேசிய பொதுக் குழு உறுப்பினருமான சரத்குமார், “திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை 17 வயதுடைய நான்கு இளைஞர்கள் ஓடும் ரயிலில் அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் எடுத்திருக்கின்றனர்.

அந்த இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரிய செயல். சமூக வலைதள மோகத்தால் மிருகத்தனமான போக்கிற்கு மனித சமூகம் மாறி வருவது வெட்கக்கேடானது.

வட மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டால் கொந்தளிப்பவர்கள், இன்று தமிழகத்தில் வட மாநில இளைஞருக்கு நேர்ந்த அவலம் இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அவப்பெயரை உண்டாக்கியதைக் கண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

சரத்குமார்

சரத்குமார்

சமூக குற்றங்களைக் கூட சாதாரணமாகச் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ள சூழலில், மக்கள் மத்தியில் வைரல் ஆக வேண்டும் என்று இப்படி வெறி பிடித்திருக்கிறார்கள்.

அந்த வெறியை முறியடிக்கவும், சமூக சீர்கேட்டு குற்றத்தின் அடிப்படையான போதைப்பொருள் ஊடுருவலை முற்றிலும் ஒழித்திட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *