திருப்பதி சமஸ்கிருந்த பல்கலைக்கழகத்தில் பட்டியலின மாணவிக்கு பாலியல் தொல்லை: இரு பேராசிரியர்கள் கைது | Tirupati Sanskrit University: Two Professors Arrested for Sexual Harassment of SC Student

Spread the love

விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்ததால், இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் உடனே சம்பந்தப்பட்ட இரண்டு பேராசிரியர்களுக்கு எதிராக போலீஸில் புகார் செய்தார்.

அவர்கள் மீது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு, பல்கலைக்கழகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை
representative image

படிப்பை கைவிட்ட மாணவி

இச்சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவியிடம் அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிடும்படி கூறினர். இதையடுத்து அம்மாணவி படிப்பை கைவிட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

ஒடிசாவிற்கு சென்று அவரிடம் வாக்குமூலம் பெற போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும், இரண்டு பேராசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. குருமூர்த்தி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய மனித உரிமைக் கமிஷனுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

இப்பிரச்னையை பாராளுமன்றத்திலும் அவர் எழுப்பினார். இப்பிரச்னை பல்கலைக்கழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *