தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை முடிந்தாலும் பரவாயில்லை திருப்பரங்குன்ற மலை உச்சி தீபத்தூணில் விளக்கு ஏற்றியாக வேண்டும் என இந்து அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், “கார்த்திகை நாள் அன்று மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலில் எப்போதும் போல தீபம் ஏற்றப்பட்டது. மற்ற நாட்களில் மலையில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை” என்று அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பட்டர்கள் கோவில் ஆணையருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்

அதில், “சிவாகமங்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது சொல்லப்பட்டிருக்கின்றது. அத்தகைய திருக்கார்த்திகையன்று அதிவாசங்களுடன் கூடிய தீபத்தை திருக்கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், பிரகாரங்கள், திருக்கோவில் சமீபத்தில் உள்ள மலைகள், கிரிவலப் பாதைகள் ஆகிய இடங்களில் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களாக அமைகின்றது.