ஆனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த தீர்ப்பையும் குறிப்பிட்டே தீர்ப்பு வழங்கியிருந்தார். அந்த 2014 மனுவில் மனுதாரர் மலையின் உச்சியில் தீபம் ஏற்றக் கோரியிருந்தார். ஆனால் மலை உச்சி இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதனால் நீதிபதி 2017ம் ஆண்டு தீர்ப்பிலும் அந்த கோரிக்கையை நிராகரித்தார்.
ஆனால் இப்போது மனுதாரர் உச்சியில் உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற அனுமதி கேட்கிறார். சிக்கந்தர் தர்கா்காவில் இருந்து சில 50 மீட்டர் தூரத்தில்தான் தீபத்தூண் உள்ளது. இதில் ஏற்றதான் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதேப்போல 1996ம் ஆண்டு தீர்ப்பையும் திமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். அந்த தீர்ப்பு அந்த ஆண்டுக்காக வழங்கப்பட்டது.
1996, 2014, 2017 தீர்ப்புகள் வேறுவேறு கோரிக்கைகளுக்காக வழங்கப்பட்டது. ஆனால் ரகுபதி இவற்றை சேர்த்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தவறான தீர்ப்பை வழங்கியதுபோல சித்தரிக்கிறார்.
மலையின் உச்சியில் தர்கா் இருக்கிறது. தீபத்தூண் சிறிய உச்சியில் இருக்கிறது. இதில்தான் தீபம் ஏற்ற 1.12.2025ல் அனுமதி வழங்கப்பட்டது”. என்கிறார்.