இந்த நிலையில், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ரூ. 3,000 கோடி வர்த்தக இழப்பு நேரிடும் எனவும், இதனை ஈடுசெய்யும் வகையில் டியூட்டி டிரா பேக் சதவீதத்தை அதிகரித்தல், தொழில் கடனுக்கு வட்டி மானியம் அதிகரித்தல், அவசர கால கடன் போன்ற சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த செய்தியை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால், தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். இதனால், கிட்டத்திட்ட ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைகள் ஆபத்தில் உள்ளன.
நமது தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.