ராமேஸ்வரம் ராமர்பாதம் செல்லும் வழியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கார்மேகம் என்பவர் தற்போது தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த 2013-ம் ஆண்டு இறந்து போனார். இதையடுத்து பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவருடன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கார்மேகம் வேலைக்காக ராமேஸ்வரத்திற்கு வந்து செல்லும் நிலையில், கஸ்தூரிக்கும் பரமக்குடியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கார்மேகம், கஸ்தூரியை கண்டித்துள்ளார். ஆனாலும் கஸ்தூரி – முருகேசன் இடையேயான தொடர்பு தொடர்ந்துள்ளது.
