அத்துடன் இந்த உறவுக்குப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தங்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்துவதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இது குறித்து கோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனுவை எதிர்த்து வாதிட்ட அரசு வழக்கறிஞர் விவேக் சௌத்ரி, “ஆணுக்குரிய திருமணத்தின் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதான 21 வயதை அந்த இளைஞர் இன்னும் எட்டவில்லை என்பதால், அவர் ‘லிவ்-இன்’ உறவில் இருக்க அனுமதிக்கக் கூடாது” என்று வாதிட்டுள்ளார்.
ஆனால், இந்த வாதத்தை நீதிபதி நிராகரித்தார். “மனுதாரர்கள் திருமண வயதை எட்டவில்லை என்பதன் ஒரே காரணத்துக்காக, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் அவர்களுக்கு இருக்கும் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மறுக்க முடியாது.” என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் தெரிவித்திருக்கிறது.