தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!

Spread the love

புது தில்லி: தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது.

யமுனை நதியில் எச்சரிக்கை குறி 204.5 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். மேலும், ஆற்றின் அருகாமையில் இருப்பவா்களை வெளியேற்றும் நடவடிக்கை 206 மீட்டரில் தொடங்குகிறது.

வியாழக்கிழமை காலை யமுனை நதியின் நீர்மட்டம் ஆற்றின் ஓட்டம் மற்றும் வெள்ள அபாயங்களை கண்காணிப்பதற்கான முக்கியக் கண்காணிப்பு புள்ளியில் அபாய அளவான 205 மீட்டராக இருந்தது.

கனமழை காரணமாக ஆற்றில் 1.78 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததால், ஹத்னிகுண்ட் தடுப்பணையின் 18 கதவுகளும் திறக்கப்பட்டன, இதன் விளைவாக ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்தது.

கடந்த சில வாரங்களாக நீர் மட்டத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான மாற்றத்தால் நிர்வாகம் விழிப்புடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முன்னதாக, புதன்கிழமை தில்லி முதல்வர் ரேகா குப்தா, நிரம்பி வழியும் யமுனை நதியின் நீர் நுழைந்த யமுனை நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர், நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது. புதன்கிழமை காலையில் நீர்மட்டம் 206 மீட்டரை நெருங்கியது, ஆனால் இன்னும் அபாய அளவைத் தாண்டவில்லை. தண்ணீர் ஓரிரு நாட்களில் குறையும். மேலும் தில்லியில் வெள்ளம் போன்ற சூழ்நிலை இல்லை என்றும், இரண்டு நாட்களுக்குள் நீர் மட்டம் குறையும் என்றும் உறுதியளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *