தற்போதுவரை 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.
மேலும் 8 முதல் 10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு தில்லியில் பலத்த மழை பெய்ததால் கட்டடம் வலுவிழந்து இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
தில்லி முதல்வர் ரேகா குப்தா, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் மீட்புப்பணி, காயமடைந்தவர்களுக்கு உதவி என தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணையைத் தொடங்குமாறும் காவல்துறையை வலியுறுத்தியுள்ளார்.