வடகிழக்கு தில்லியில் உள்ள நியூ உஸ்மான்பூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து புது உஸ்மான்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது, அதிகாலை 4.10 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு ஒரு தகவல் வந்தது. அதில் தனியார் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 20-25 வாகனங்கள் தீயில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.