தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

Spread the love

ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் தில்லியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு இன்று (அக். 1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்நிகழ்வையொட்டிப் பேசிய தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட், நாட்டின் வளர்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். போன்று பல்வேறு அமைப்புகள் முக்கியப் பங்காற்றியுள்ளன.

மாணவர்களிடையே குடிமை மற்றும் சமூக உணர்வை ஏற்படுத்துவது நமது கடமை. பாஜகவின் சித்தாந்த ஆதாரமான ஆர்.எஸ்.எஸ்., உலகின் மிகப்பழமையான அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாத பங்காற்றியுள்ளது. ராஷ்ட்ரநீதி என்பது புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளது.

இதனால், தில்லியில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் ராஷ்ட்ரநீதி பாடம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனுபவக் கற்றல் முறை மூலம் மாணவர்களுக்கு இது கற்பிக்கப்படும்.

மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு, நெறிமுறை நிர்வாகம் மற்றும் தேசிய பெருமை வளர்க்கும் நோக்கத்தில் இதனைக் கொண்டுவரவுள்ளோம். இது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. சனிக்கிழமைதோறும் இப்பாடம் மாணவர்களுக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *