தி.நகரில் கேமராவுடன் வானில் வட்டமடிக்கும் ட்ரோன்கள்: தீபாவளி பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார் | 18000 police personnel on Diwali security duty

1380146
Spread the love

தீ​பாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு சென்​னை​யில் பாது​காப்​புப் பணி​யில் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். மேலும் கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி நடை​பெறும் திருட்டை தடுக்​கும் வகை​யில் வணிக வீதி​களில் சாதாரண உடை​யில் போலீ​ஸார் கண்காணித்து வரு​கின்​றனர். தீபாவளிப் பண்​டிகைக்கு இன்​னும் 2 நாட்​களே உள்ள நிலை​யில் புத்​தாடைகள், பொருட்களை வாங்​கு​வதற்​காக மக்​கள் நகரின் முக்​கிய பகு​தி​களில் திரண்டு வரு​கின்​றனர்.

குறிப்​பாக தி.நகர், பாண்​டிபஜார், புரசை​வாக்​கம், மயி​லாப்​பூர், பூக்​கடை, வண்​ணாரப்​பேட்​டை, கோயம்​பேடு ஆகிய பகு​தி​களில் கூட்​டம் அதி​க​மாக உள்​ளது. இதையடுத்து பாது​காப்​புப் பணி​யில் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்ளனர்.

இந்​நிலை​யில் பண்​டிகையை ஒட்டி மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து காவல் ஆணை​யர் அருண் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தீபாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு கூட்ட நெரிசலை கட்​டுப்​படுத்​துதல், குற்ற தடுப்பு முறை​கள், போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​ப​டா​மல் வாக​னங்​களை ஒழுங்​குபடுத்​துதல் ஆகிய 3 வித​மான பணி​களில் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடுபட்டுள்ளனர்.

தி.நகரில் 8, வண்​ணாரப்​பேட்​டை-2, கீழ்ப்​பாக்​கம்​-4, பூக்​கடை-2 என 4 இடங்​களி​லும் மொத்​தம் 16 தற்​காலிக கண்​காணிப்பு கோபுரங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அதில் இருந்​த​வாறு போலீ​ஸார் சுழற்சி முறை​யில் 24 மணி நேர​மும் கண்​காணித்து வருகின்றனர்.

தி.நகர், வண்​ணாரப்​பேட்​டை, புரசை​வாக்​கம், பூக்​கடை பகு​தி​களில் மொத்​தம் 4 தற்​காலிகக் காவல் கட்​டுப்​பாட்​டறை​கள் மற்​றும் தற்​காலிக உதவி மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. சிசிடிவி கேமரா பதிவு​களை கண்​காணித்​தல், குற்​ற​வாளி​கள் நடமாட்​டத்தை கண்​காணித்​தல், கூட்​டத்​தில் தொலை​யும் குழந்​தைகளை உரிய​வர்​களிடம் ஒப்​படைத்​தல் போன்ற பணி​களுக்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

தி.நகர் மற்​றும் வண்​ணாரப்​பேட்டை பகு​தி​யில் கூடு​தலாக சிசிடிவி கேம​ராக்​களை பொருத்​தி, அதன்​மூலம் குற்​றங்​கள் நிகழாமல் கண்​காணிக்​கப்​பட்டு வரு​கிறது. தி.நகரில் 4 ட்ரோன் கேம​ராக்​கள் மூலம் கூட்ட நெரிசல் உள்ள பகு​திகளில் கண்​காணிக்​கப்​பட்டு வரு​கிறது.

பழைய குற்​ற​வாளி​களை கண்​டு​பிடிப்​ப​தற்​காக முகம் அடை​யாளம் காணும் (எப்​ஆர்​எஸ்) செல்​போன் செயலி மூலம் போலீ​ஸார் சுழற்சி முறை​யில், குழுக்​களாகப் பிரிந்து கண்​காணித்​தும், வாட்​ஸ்​-அப் குழு தொடங்கி முக்​கிய நிகழ்​வு​களை உடனுக்​குடன் பரி​மாற்​றம் செய்​தும், குற்​றச் செயல்​கள் நடக்​காமல் காத்​தும் வரு​கின்​றனர்.

மேலும் வாக​னங்​களில் ரோந்​துப் பணி​யும் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளது. பொருட்​கள் வாங்க வரும் பெண்​களின் கழுத்​தில் உள்ள தங்க நகைகள் திருடப்​ப​டா​மல் தடுக்க, கழுத்​தில் துணி​களைச் சுற்றி கவச​மாக கட்​டிக்​கொள்ள வலி​யுறுத்​தப்​பட்​டு, துணி கவசங்​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

பொது​மக்​கள் அதி​கள​வில் கூடும் இடங்​களில் குற்​றச் சம்​பவங்​களில் ஈடு​படும் நபர்​களைக் கண்காணிக்க சா​தாரண உடை​யில் ஆண், பெண் போலீ​ஸார் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளனர்​. இவ்​வாறு காவல்​ ஆணை​யர்​ தெரிவித்துள்ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *