தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவும்: மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல் | School Education Department instructs to students Celebrate Diwali safely

1379716
Spread the love

சென்னை: தீபாவளி பண்​டிகை வரும் 20-ம் தேதி கொண்​டாடப்பட உள்​ளது. இந்த நாளில் பள்ளி மாணவர்​கள் பாது​காப்​பாக தீபாவளி பண்​டிகையை கொண்​டாடு​வது குறித்​து, பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் ஆண்​டு​தோறும் அறி​வுரை வழங்​கப்​பட்டு வருகிறது. அதன்​படி, நடப்​பாண்​டும் மாணவர்​கள் விபத்​தில்லா தீபாவளி பண்​டிகையை மகிழ்ச்​சி​யுடன் கொண்​டாடும் வகை​யில், பல்​வேறு அறி​வுரைகளை பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் வழங்​கி​யுள்​ளார்.

அதன் விவரம் வரு​மாறு: தீபாவளி பண்​டிகை நாளில் மக்​கள் கவனக் குறை​வாக பட்​டாசு வெடிப்​ப​தால் தீ விபத்து ஏற்​படலாம். இது தவிர, உயிர்​சேதம், பொருள் சேதங்​கள் ஏற்பட வாய்ப்​புள்​ளது. மேலும், குழந்​தைகளுக்கு தீக்​கா​யங்​களும், சில நேரங்​களில் பார்வை இழப்​பும் ஏற்​படக் கூடும். இத்​தகைய நிகழ்​வு​களை தவிர்ப்​பதும், தடுப்​பதும் நமது கடமை​யாகும். எனவே, பள்ளி மாணவர்​களுக்கு தீபாவளி பண்​டிகையை பாது​காப்​பாக கொண்​டாட விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்பட வேண்​டும்.

அதன்​படி, பட்​டாசுகளை கொளுத்​தும் போது தளர்​வான ஆடைகள், எளி​தில் பற்​றக்​கூடிய ஆடைகளை அணி​யக் கூடாது. பட்​டாசு வெடிக்​கும் போது அருகே ஒரு வாளி தண்​ணீர் வைத்​துக் கொள்ள வேண்​டும். கையில் வைத்து பட்​டாசுகளை வெடிக்​கக் கூடாது. அதே​போல், கூட்​ட​மான இடங்​கள், தெருக்​கள், சாலைகளில் வெடிக்க வேண்​டாம். பெற்​றோர் முன்பு பிள்​ளை​கள் பட்​டாசுகளை வெடிக்க வேண்​டும்.

விலங்​கு​களை துன்​புறுத்​தும் வகை​யில் பட்​டாசுகளை வெடிக்​கக் கூடாது. வெடிக்​காத பட்​டாசுகளை பரிசோ​திப்​பதை தவிர்க்க வேண்​டும். மேலும், இரவு 10 முதல் காலை 6 மணி வரை பட்​டாசுகளை வெடிக்​கக் கூடாது என்​பது உட்பட பல்​வேறு அறி​வுரைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த தகவல்​களை பள்ளி மாணவர்​களுக்கு தெரி​வித்து ஆசிரியர்​கள் தொடர் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *