தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் | Special wards at Kilpauk Govt Hospital to treat Diwali cracker burns

1380046
Spread the love

சென்னை: கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் 20 படுக்​கைகளு​டன் சிறப்பு பிரிவு திறப்பு திறக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல், தமிழகம் முழு​வதும் தீபாவளி பட்​டாசு தீக்​கா​யங்​களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்​டு​கள் அமைக்​கப்​பட்​டுள்ளன என்று சுகாதா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

சென்னை அரசு கீழ்ப்​பாக்​கம் மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் நேற்று தீபாவளி தீக்​காய சிறப்பு உள் மருத்​துவ பயனாளிகள் பிரிவை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் திறந்து வைத்​தார். தொடர்ந்​து, தீபாவளி பண்​டிகை​யில் பட்​டாசு வெடிக்​கும்​போது செய்ய கூடியவை மற்​றும் செய்​யக் கூடாதவை பற்​றிய விழிப்​புணர்வு கையேட்​டினை வெளி​யிட்​டார்.

மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் மரு.சுகந்தி ராஜகு​மாரி, அரசு கீழ்ப்​பாக்​கம் மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை டீன் எம்​.க​வி​தா, கல்​லூரி துணை முதல்​வர் செந்​தில்​கு​மாரி, நிலைய மருத்​துவ அலு​வலர் வாணி, தீக்​காய மற்​றும் ஒட்​டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தலை​வர் மகாதேவன் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

அப்​போது, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தீபாவளி பண்​டிகை நெருங்கி வரு​வதையொட்டி பாது​காப்​புடன் பட்​டாசு வெடிப்​பதும், தீக்​கா​யம் இல்​லாத வகை​யில் தீபாவளியை கொண்​டாட வேண்​டும் என்​கின்ற வகை​யிலும் தமிழக அரசு பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​கள், மாவட்ட தலைமை மருத்​து​வ​மனை​கள், வட்​டார மருத்​து​வ​மனை​கள் ஆகிய இடங்​களில் தீ விபத்​துக்​கான சிறப்பு வார்​டு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. தேவை​யான மருந்து உபகரணங்​கள், போது​மான அளவில் இருப்பு உறுதி செய்​யப்​பட்​டிருக்​கிறது.

கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை தீக்​காய சிகிச்​சை​யில் புகழ்​பெற்ற மருத்​து​வ​மனை​யாக உள்​ளது. அந்​தவகை​யில் இந்த மருத்​து​வ​மனை​யில் தீபாவளி தீக்​காய சிறப்பு பிரி​வில் 20 படுக்​கைகள் வசதி​களு​டன் கூடிய சிறப்பு வார்​டு​கள் உரு​வாக்​கப்​பட்டு தற்​போது திறந்து வைக்​கப்​பட்டுள்​ளது.

இதில் 5 வெண்​டிலேட்​டர் கருவி​களு​டன் ஆண்​கள் வார்​டில் 12 படுக்​கைகளும், பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் வார்​டில் 8 படுக்​கைகளும் உள்​ளன. 24 மணி நேர​மும் அறுவை அரங்​கு​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது. குழந்​தைகள் பெரிய​வர்​களு​டைய கண்​காணிப்​பில் மட்​டுமே பட்​டாசுகள் வெடிக்க வேண்​டும். பருத்தி ஆடைகள் அணிந்து பட்​டாசு வெடிப்​பது நல்​லது. பட்​டாசு வெடிக்​கும்​போது செருப்​பு​கள் அணிந்து கொள்ள வேண்​டும். உள்​ளிட்ட அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டு, விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​பட்​டு வரு​கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *