தீபாவளி பண்டிகையையொட்டி 37 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத பணம் ரூ.38 லட்சம் பறிமுதல் | Anti-corruption raids conducted in 37 govt offices ahead of diwali festival

1380049
Spread the love

சென்னை: தீ​பாவளி பண்​டிகை​யையொட்​டி, அரசு ஊழியர்​கள் லஞ்​சம் பெறு​வ​தாக எழுந்த புகார்​களின் அடிப்​படை​யில் தமிழகம் முழு​வதும் 37 அரசு அலு​வல​கங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ரூ.38 லட்​சம் ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

தீபாவளி பண்​டிகை​யையொட்​டி, சில அரசு அலு​வல​கங்​களில் பொது​மக்​களிடம் கட்​டாயப்​படுத்தி லஞ்​சம், பரிசுப் பொருட்​களை ஊழியர்​கள் பெறு​வ​தாக புகார் எழுந்​தது. இதன் அடிப்​படை​யில், உடனடி​யாக நடவடிக்கை எடுக்​கு​மாறு லஞ்ச ஒழிப்​புத் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி அபய்​கு​மார் சிங் உத்​தர​விட்​டார்.

2 நாட்​களாக சோதனை: இதையடுத்​து, மாநிலம் முழு​வதும் புகார்​களுக்கு உள்​ளான அரசு அலு​வல​கங்​கள், சந்​தேகத்​துக்​குரிய அரசு அலு​வல​கங்​களில் லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கடந்த 2 நாட்​களாக சோதனை நடத்​தினர். அந்த வகை​யில், தமிழகம் முழு​வதும் மொத்​தம் 37 அரசு அலு​வல​கங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், கணக்​கில் வராத ரூ.37 லட்​சத்து 74,860 ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக, கைப்​பற்​றப்​பட்ட பணம் குறித்து விசா​ரிக்க சம்​பந்​தப்​பட்ட அரசு அதி​காரிக்கு சம்​மன் அனுப்​பப்பட உள்​ளது. விசா​ரணை​யில் கிடைக்​கும் தகவலின் அடிப்​படை​யில், அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று லஞ்ச ஒழிப்​புத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *