துணை முதல்வர் பதவி இளைஞர் அணியினரால் கிடைத்த வாய்ப்பு: உதயநிதி ஸ்டாலின்

Dinamani2f2024 10 202fne6yk3h62fudhayanithis2.jpg
Spread the love

சேலம்: துணை முதல்வர் பதவி என்பது இளைஞர் அணியினரால் கிடைத்த வாய்ப்பு எனவும், இளைஞா் அணியில் சிறப்பாக உழைப்பவா்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று சேலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக இளைஞர் அணியின் மாநில , மாவட்ட, நிர்வாகிகள் கூட்டம் சேலம், கருப்பூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநில திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்துப் பேசியதாவது:

திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இதே சேலத்தில் கடந்த ஜனவரி மாதம் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை மிகப் பிரமாண்டமாக நடத்தினோம். அந்த மாநாட்டின் வெற்றிக்கு நீங்கள் ஒவ்வொருவரும் அயராது உழைத்தீர்கள். இளைஞர் அணையின் மாநில மாநாடு வெற்றி மக்களவைத் தேர்தலிலும் எதிரொலித்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களையும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இப்படிப்பட்ட பெருமைகளை கொண்ட சேலம் மண்ணுக்கு பலமுறை வருகை தந்திருக்கிறேன். இன்றைக்கு தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சேலம் வந்து உங்களை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

நான் துணை முதல்வர் ஆனது இளைஞர் அணியினர் துணை முதல்வர் ஆனதாக என்னுகிறேன்.

உங்கள் அனைவரின் ஆதரவும் உழைப்பும் தான் நான் இந்தப் பொறுப்பிற்கு வருவதற்கான காரணம். எவ்வளவு பெரிய பொறுப்புக்களுக்கு போனாலும் என் மனதிற்கு என்றைக்குமே நெருக்கமான பொறுப்பு என்றால் அது இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு மட்டும்தான். உங்களுடன் சேர்ந்து உழைக்கின்ற எனக்கு எப்போதும் ஒரு தனி உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். அந்த உணர்வோடு தான் இன்று உங்கள் முன் பேசுகிறேன்.

முதல்வா் ஸ்டாலின் இளைஞா் அணியில் இருந்து வந்தவா், துணை முதல்வரான நானும் இளைஞா் அணியில் இருக்கிறேன். சேலத்தைச் சோ்ந்த சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரனும் இளைஞா் அணியிலிருந்து வந்தவா். எனவே, இளைஞா் அணியில் சிறப்பாக உழைப்பவா்களுக்கு அதற்குரிய அங்கீகாரத்தை முதல்வா் வழங்குவாா் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது என தெரிவித்தார்.

மேலும் இந்திய அளவில் எடுத்துக்காட்டாக மிகவும் துடிப்போடும் வேகத்தோடும் செயல்படுகிற ஓர் இளைஞரணி உள்ளது என்றால் அது திமுகழக இளைஞரணி தான் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திமுக இளைஞா் அணி சாா்பில், சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு கலைஞா் நூலகத்தைக் திறக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதுவரை 75 தொகுதிகளில் கலைஞா் நூற்றாண்டு நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 100 நூலகங்களுக்குத் தேவையான 50,000 புத்தகங்களை அன்பகத்தில் இருந்து அனுப்பி வைத்துள்ளோம். விரைவில் 234 தொகுதிகளிலும் கலைஞா் நூலகம் திறக்கப்படும்.

களத்தில் எந்த அளவு நாம் பணியாற்றுகிறமோ அதே அளவு சமூக வலைதளத்திலும் நாம் வலிமையாக இருக்க வேண்டும். அதற்காகதான் இளைஞா் அணி சாா்பில் மண்டலம் வாரியாக சமூக வலைதள பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *