வஜிராபாத் வடிகால், யமுனையில் பாயும் முக்கிய இடங்களில் ஒன்றாகும், எனவே, நதியைச் சுத்தம் செய்வதில் இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை பாஜக கைப்பற்றிய பிறகு, யமுனை நதியைச் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது,
தில்லியில் தேர்தலின்போது யமுனையில் மாசுபாடு ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தது, ஆக்கிரமிப்புகள், வெள்ள மேலாண்மை தொடர்பாக அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குறிவைத்தன.
பாஜக ஆம் ஆத்மி கட்சியைத் தாக்கியது மற்றும் யமுனையைச் சுத்தம் செய்யும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம் சாட்டியது. இதுதவிர, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் யமுனையை சுத்தம் செய்வது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.