துபையில் வரலாற்றை திருத்தி எழுதுமா ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி!

Dinamani2f2025 03 072ff9t7oom42fap25061507336127.jpg
Spread the love

நியூசி.க்கு எதிரான வரலாறு திருத்தி எழுதப்படுமா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்துகொள்ள உலகம் காத்துக் கிடக்கிறது.

ஐசிசி நடத்தும் தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து இதுவரை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 4 முறை ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில், நியூசிலாந்து அணி 3 வெற்றிகளையும், இந்திய அணி ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கடந்த 2000 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி, 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள் மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதியுள்ளன. இதில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மட்டுமே இந்திய அணி நியூசிலாந்தை வென்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *