ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டில் தவறுதலாக குண்டு பாய்ந்ததில் 8 வயது சிறுமி படுகாயம்.
கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த அனுஷ்கா (வயது-8) என்ற சிறுமியின் குடும்பத்தினர் இன்று (டிச.26) காலை 11 மணியளவில் வனவிலங்குகளை விரட்ட நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது, அந்த குண்டு எதிர்பாராத விதமாக அந்த சிறுமியின் மீது பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் தெரிவிக்காமல் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.