அந்த வரிசையில் மலையாள இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் வெளிவந்த ‘பீஷ்மபர்வம்’ படத்தின் திரைக்கதையாசிரியர் தேவதத் ஷாஜி இப்படம் குறித்து விமர்சித்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர், “ஒரு தவறான கருத்தைச் சரி என்று காட்ட, உயர்தரமான மேக்கிங்கை ஒரு திரைப்படம் பயன்படுத்தினால், அங்குத் தொழில்நுட்பத் திறன் என்பது மக்களின் சிந்தனையை மடைமாற்றும் ஒரு கருவியாக மாறிவிடுகிறது.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
இவரைப் போல, திரைத்துறையினர் பலரும், ‘இது மதவாத அரசியலை பரப்பும் பிரச்சார சினிமா’, ‘பா.ஜ.க அரசு செய்த தவறுகளை புனிதப்படுத்தும் வேலையை இத்திரைப்படம் செய்திருக்கிறது.” என விமர்சித்து வருகிறார்கள்.