துரோகங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது: பழனிசாமி திட்டவட்டம் | Betrayals cannot bring down the ADMK says EPS

Spread the love

சேலம்: துரோகங்​களால் அதி​முகவை வீழ்த்த முடி​யாது என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

சேலம் மாவட்​டம் ஓமலூரில் நேற்று நடை​பெற்ற அதி​முக 54-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி பேசி​ய​தாவது: ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு அதி​முக தொடர்ந்து சோதனை​களை சந்​தித்து வரு​கிறது. ஆனாலும், மக்​கள் செல்​வாக்கு குறைய​வில்​லை. ரூ.30,000 கோடி ஊழல் செய்த திமுக தேர்​தலை சந்​திக்க தயா​ராக இருக்​கிறது. ஸ்டா​லின் எவ்​வளவு சூழ்ச்​சிகள் செய்​தா​லும் பலிக்காது. துரோகங்களால் அதி​முகவை வீழ்த்த முடியாது.

எத்​தனை துரோகி​கள் கட்சியை வீழ்த்த முயன்​றாலும், அத்​தனை பேரை​யும் வீழ்த்தி அதி​முக தலைநிமிர்ந்து நிற்​கிறது. பெண்​களுக்கு பாது​காப்பு இல்​லாத ஆட்​சி​தான் தற்​போது தமிழகத்​தில் நடக்​கிறது. போக்சோ சட்​டத்​தில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.104 கோடி நிவாரணம் வழங்​கப்​பட்​ட​தாக பெரு​மை​யாக கூறுகின்​றனர். பாலியல் வன்​கொடுமையை போக்சோ சட்​டத்தை கடுமை​யாக அமல்​படுத்​து​வ​தால்​தான் தடுக்க முடி​யும். நிவாரணம் கொடுப்​ப​தால் அல்ல.

திமுக அரசு தனக்கு வேண்​டப்​பட்​ட​வர்​களை டிஜிபி​யாக கொண்​டுவர வேண்​டுமெனக் கரு​தி, அதற்​கான பட்​டியலை அனுப்​ப​வில்​லை. உள்​ளாட்சி பணி நியமனத்​தில் ரூ.888 கோடி ஊழல் நடந்​துள்​ளது. 5.50 லட்​சம் அரசு காலி பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட​வில்​லை. திமுக ஆட்​சி​யில் 4 ஆண்​டு​களில் 75,000 பேர் பணி ஓய்​வு​பெற்ற நிலை​யில், 50 ஆயிரம் பேரைத்​தான் அரசுப் பணி​யிடங்​களில் நியமித்​துள்​ளனர். படித்​தவர்​களை​யும், படிக்​காதவர்​களை​யும் ஏமாற்​றும் ஒரே கட்சி திமுக. தேர்​தல் அறிக்​கை​யில் அறி​வித்​த​படி பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தை​யும் அமல்​படுத்​த​வில்​லை. அனைத்து தரப்​பினருக்​கும் அதி​முக​தான் பாது​காப்​பான ஆட்​சி​யாக இருக்​கும்.

ஆளுங்​கட்​சி​யாக இருந்​தா​லும், எதிர்க்​கட்​சி​யாக இருந்​தா​லும் மக்​கள் பிரச்​சினைக்கு குரல் கொடுப்​பது அதி​முக​தான். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக வெற்றி பெற முடி​யாது என்ற நிலை ஏற்​பட்​டுள்​ள​தால், மாணவர்​களுக்கு லேப்​டாப் கொடுக்​கப்​படும் என்று அறி​வித்​துள்​ளனர். மகளிர் உரிமைத் தொகையை மையப்​படுத்​தி, வாக்​கு​களைப் பெற திமுக அரசி​யல் தந்​திரம் செய்​கிறது.

வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தத்​தில், அதி​முக​வுக்கு வாக்​களிக்க கூடிய​வர்​களை வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்க முயற்​சிப்​பார்​கள்.

இவ்​​வாறு பழனிசாமி பேசி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *