துரோகத்தால் தோல்வி: செங்கோட்டையன் விளக்கம் | sengottaiyan about admk lose in 2021 elections

1350873.jpg
Spread the love

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தி​யூரை அடுத்த அத்தாணி​யில் நேற்று முன்​தினம் இரவு நடந்த அதிமுக கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்சர் கே.ஏ.செங்​கோட்​டையன் பேசும்​போது, “கடந்த தேர்​தலில் துரோகி​களால் வெற்றியை இழந்​தோம்” என்றார். இது அதிமுகவினரிடையே சர்ச்சையை கிளப்பியது,

இந்நிலை​யில், நேற்று காலை கோபி அருகே கள்ளிப்​பட்​டி​யில் நடந்த நிகழ்ச்​சி​யில்பங்கேற்ற செங்​கோட்​டையன் செய்தி​யாளர்​களிடம் கூறியதாவது: அந்​தி​யூர் தொகு​தி​யில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்​ளோம். ஆனால், கடந்த சட்டப்​பேர​வைத் தேர்​தலில் சிலரின் துரோகத்​தால் அதிமுக தோல்​வியடைந்​தது. துரோகம் என்ற வார்த்தை, அந்தி​யூர் தொகு​திக்கு மட்டுமே பொருந்​தும். முன்​னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகு​மார் என்னைப் பற்றி பேச​வில்லை என தெளிவாகக் கூறி​விட்​டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *