ராதாகிருஷ்ணாவின் அண்டை வீட்டாரான அனில் குமார், சேவல் வளர்த்து வருகிறார். இந்த சேவல் நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு கூவுவதால், தூங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார் ராதாகிருஷ்ணா.
வயது மூப்பு காரணமான நோயால் அவதிப்பட்டுவரும் ராதாகிருஷ்ணா, இரவில் தூக்கமின்மையால் அவதிப்பட்டு, அதிகாலையில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது சேவல் நாள்தோறும் அதிகாலையில் கூவுவதால் தூங்க முடியவில்லை என வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்ட அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ராதாகிருஷ்ணா, அனில் குமார் ஆகிய இருவரையும் வைத்து விசாரணை நடத்தி தீர்வு காண முயன்றனர்.