தூத்துக்குடி: சொத்தைப் பிரித்து தர மறுத்த தாய்; கொன்று உடலை கிணற்றில் வீசிய மகன் – நடந்தது என்ன?

Spread the love

நகைக்காக மூதாட்டி பேச்சியம்மாள் கொலை செய்யப்பட்டரா அல்லது  அவரின் கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  அதே நேரத்தில், இச்சம்பவம் தொடர்பாக, பேச்சியம்மாளின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை  மேற்கொண்டனர். அதில், மூதாட்டியின் மூத்த மகனான சக்திவேல்,  முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த  போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.  அதில், தனது தாயை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

காடல்குடி காவல் நிலையம்

காடல்குடி காவல் நிலையம்

மேலும்,  அவரிடம் நடத்திய விசாரணையில், “ குடும்ப சொத்தை பிரித்து தரும்படி தாய் பேச்சியம்மாளிடம் அடிக்கடி கேட்டு வந்தேன். இப்போது தனியாக பிரித்து கொடுக்க முடியாது. 6 பேரையும் மொத்தமாக வைத்துதான் பிரித்து தருவேன் எனக் கூறினார். எனக்கு கடன் பிரச்னை உள்ளது அதனால் என்னுடைய பங்கினை பிரித்துத் தருமாறு தொடர்ந்து கேட்டு வந்தேன். ஆனால், அவர் சம்மதிக்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *