தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி : பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்! | Kalugumalai Arulmigu Kalugasalamoorthy Temple

Spread the love

பரிகாரச் சிறப்பு

கழுகுமலை செவ்வாய் மற்றும் குரு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடைகள் உடனே நீங்குகின்றன. குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களிலிருந்து நிவாரணம் வழங்கும் தலமாகவும் இது விளங்குகிறது.

தீராத நோயால் துன்பப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள், இந்தத் தலத்துக்கு வந்து தவிடு, வெல்லம் ஆகியவற்றோடு குழந்தையை கோயிலுக்குத் தானமாக அளிக்க வேண்டும். அதைப் பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகத்தினர் குழந்தையை ஏலம் விடுவார்கள்.

அப்போது குழந்தையை ஒருவர் ஏலம் எடுப்பார். அதற்கென்று உறவினர் ஒருவரையும் அழைத்துவருவார்கள். அவர் ஏலம் எடுத்ததும் கோயில் நிர்வாகத்துக்குத் தவிட்டுக்கு உரிய தொகையைக் கொடுத்து குழந்தையைப் பெற்றுக்கொள்வார்கள். இப்படிச் செய்தால் குழந்தையைப் பிடித்திருக்கும் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

கழுகாசல மூர்த்தியை வழிபாடு செய்துவிட்டு கோயிலோடு ஒட்டியிருக்கும் மலையையும் சென்று காணவேண்டும். சமணர்காலக் கலை கொட்டிக்கிடக்கும் இடம் கழுகுமலை. இங்குதான் எழில்மிகு வெட்டுவான் கோவில் உள்ளது.

பாதி முடிந்த நிலையிலிருந்தாலும் இதன் கம்பீரமும் அழகும் காண்பவரைப் பிரமிப்பூட்டுபவை. இங்குள்ள குகைகளில் சமண முனிவர்கள் தங்கி கல்விப்பணி செய்ததற்கான சிற்ப ஆதாரங்கள் மலைமீது உள்ளன.

கழுகுமலை வெட்டுவான்கோயில்

கழுகுமலை வெட்டுவான்கோயில்

வெட்டுவான்கோவில் இப்படி முடிவற்று நிற்பதற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். பெரும் தச்சன் ஒருவன் மலையின் உச்சியில் வடித்துக்கொண்டிருக்கும்போது அவன் மகன் மலையின் நடுப்பகுதியில் சிற்ப வேலைகளைச் செய்யத் தொடங்கினான்.

தனக்குப் போட்டியாக யாரோ வந்துவிட்டார்கள் என்று பொறாமை கொண்ட தச்சன் தன் உளியை ஒலிவந்த திசை நோக்கி எறிந்தான். அந்த உளி தச்சனின் மகன் மீது பட்டு அவன் உயிர் துறந்தான் என்னும் பெருந்தச்சனின் கதை இங்கு சொல்லப்படுகிறது.

ஒருமுறை சென்று தரிசனம் செய்தால் நம் மனதை விட்டு நீங்காத அற்புதத் தலம் கழுகுமலை. வாய்ப்புக்கிடைக்கும் போது கழுகுமலை சென்று கழுகாசல மூர்த்தியை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் முருகனின் திருவருள் எப்போதும் நிறைந்திருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *