தூத்துக்குடி மாவட்டம், நவலடியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜா. விவசாயியான இவருக்கும், அருகிலுள்ள வெள்ளூரைச் சேர்ந்த காசி என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கருங்குளத்தில் வைத்து தகராறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 24.04.2013-ம் தேதி ஆறுமுகராஜா தனது தாயார் ருக்மணி வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த காசி மற்றும் அவரின் உறவினர்களான இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம், துரைமுத்து உள்ளிட்ட 7 பேர் ஆறுமுகராஜாவைத் தாக்கி அரிவாளால் வெட்ட முயன்றனர்.

இதில், ஆறுமுகராஜா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கினை வாபஸ் பெறக் கோரி, 5 பேர் ஆறுமுகராஜாவைத் தொடர்ந்து மிரட்டி வந்தனராம். ஆனால், ஆறுமுகராஜா வழக்கினை வாபஸ் பெற மறுத்துவிட்டாராம்.
இந்த நிலையில், இசக்கிமுத்து, தளவாய், சிவராமலிங்கம், துரைமுத்து மற்றும் ஒரு இளம் சிறார் ஆகியோர் ஆறுமுகராஜாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.