தூய்மை பணியாளர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல் | Kamal Haasan insist on immediate solution to sanitation workers issue

1373439
Spread the love

சென்னை: தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார். சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி விடு​முறையை தொடர்ந்​து, நாடாளு​மன்ற கூட்​டம் இன்று மீண்​டும் தொடங்குகிறது. இதையொட்​டி, மநீம கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் எம்​.பி., சென்​னை​யில் இருந்து ஏர் இந்​தியா விமானம் மூலம் நேற்று டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார்.

சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தூய்​மைப் பணி​யாளர்​களின் கோரிக்​கைகள் குறித்து நீண்ட நாட்​களாக பேசிக்​கொண்டு இருக்​கிறேன். என் பேச்​சுகளை முழு​மை​யாக கவனிப்​பவர்​களுக்கு அது தெரி​யும். தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினை​களை நாம் உடனடி​யாக பேசி சரிசெய்ய வேண்​டும். இதுகுறித்து முதல்​வரிடம் எடுத்​துச் சொல்ல இருக்​கிறோம்.

விசிக தலை​வர் திரு​மாவளவனின் சிற்​றன்னை மறைந்​துள்​ளார். அவருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். திரு​மாவளவனுக்கு இந்த தகவல் நேற்றே (16-ம் தேதி) தெரி​யும். ஆனால், தொண்​டர்​களின் மகிழ்ச்​சிக்​காக, பிறந்​த​நாள் விழா​வில் கலந்து கொண்​டார்.

சேலத்​தில் நடை​பெறும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநாட்​டில் என்​னால் கலந்து கொள்ள முடிய​வில்​லை. நான் பேசிய பதிவை அனுப்​பி​யுள்​ளேன். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *