இந்தக் கொலைச் சம்பவம், நகைக்காகவா அல்லது வேறு ஏதும் முன்பகையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். முருகசெல்வியின் செல்போன் அழைப்புகள், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முருகசெல்வியின் வீட்டிற்கு தினமும் பால் கொண்டு வரும் சரத் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில், ”எனக்கு கடன் பிரச்னை உள்ளது, தனியாக உள்ள முருகசெல்வியிடம் நகையை பறித்தால் கடன் பிரச்னை தீர்ந்துவிடும் என்பதால், முருகசெல்வியை நானே கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட முருகசெல்விக்கும், கைது செய்யப்பட்ட பால்காரர் சரத்திற்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால், சரத், முருகசெல்வியை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. சரத்திட,ம் இருந்து 4 சவரன் தங்கநகை, கொலை செய்ய பயன்படுத்திய இரும்புக்க ம்பியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.