இதனையடுத்து சொர்ணமும் சுரேஷுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். பலமுறை முயன்றும் சொர்ணம், சுரேஷிடம் பேச மறுத்துள்ளாராம். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ், சொர்ணம் பணிபுரியும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று, “உன்னிடம் தனியாகப் பேச வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அதற்கும் சொர்ணம் மறுக்கவே, பள்ளிக்கூட வாசலில் வைத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சொர்ணத்தின் கழுத்துப்பகுதியில் ஓங்கி குத்தியுள்ளார்.
சொர்ணம் சுதாரிப்பதற்குள் அவரது முதுகு, கை, கால் என 5 இடங்களில் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதனைப் பார்த்த மாணவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.
சக ஆசிரியர்கள், ஊழியர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து இலத்தூர் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.