போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பீரோ இருக்கும் இடம், பீரோவின் சாவி வைக்கும் இடம் தெரிந்த நபரே பீரோவை திறந்து நகை, பணத்தை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். நகை, பணத்தை தவிர வேறெந்த பொருளும் திருடுபோகவில்லை எனவே, மாரியப்பனுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான நபர் யாரோ ஒருவர்தான் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என போலீஸார் சந்தேகித்தனர். அவரது பக்கத்து வீடுகளைச் சேர்ந்த நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாரிப்பனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த டீக்கடைக்காரர், மாரியப்பனின் வீட்டின் முன்பு ஒரு சாக்குமூட்டை கிடப்பதைப் பார்த்து அவருக்கு தகவல் கூறினார்.

அந்த சாக்குமூட்டையை மாரியப்பன் பிரித்துப் பார்த்தபோது அதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், பணம் அப்படியே இருந்துள்ளது. இருப்பினும், சி.சி.டி.வி காட்சிப்பதிவுகள் மூலம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அந்த பர்தா கொள்ளையன் யார்? நகைகள், பணத்தை மீண்டும் மாரியப்பனின் வீட்டின் முன்பு சாக்கு மூட்டையில் போட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.