
உயிரிழந்தவர்களில் பார்வை மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் தாயும் ஒருவர். அந்த பெண்ணிடம் தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
சிறுவயதிலேயே தந்தையையும் இழந்த நிலையில், இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பெண் கிருத்திகாவுக்கு புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையினை அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.