தென்காசி: ரவுடியை பிடிக்கச் சென்று மலை உச்சியில் சிக்கிய காவலர்கள்; பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு | Cops trapped on mountaintop while trying to catch rowdy; rescued after hours of struggle

Spread the love

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30) இவன் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார்.

குறிப்பாக பாலமுருகன் மீது தென்காசி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, அருப்புக்கோட்டை, திருச்சி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

சிறை

சிறை
representative image

அவரது சொந்த ஊரான கடையம் காவல் நிலையத்தில் மட்டும் பாலமுருகன் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதிகளவு திருட்டு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. பாலமுருகன் திருடுவதில் எவ்வளவு கை தேர்ந்தவரோ, அதே அளவுக்கு போலீஸ் பிடியில் இருந்து தப்புப்பதிலும் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். அதன்படி கேரளா மாநிலத்தில் நடைபெற்ற வழக்கில் கைதான பாலமுருகன் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் தமிழகத்தின் அருப்புக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக தமிழ்நாடு போலீசார் திருச்சூர் சிறையில் இருந்து பாலமுருகனை இரண்டு வாரங்களுக்கு முன்பு அழைத்து வந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *