தென்காசி மாவட்டம், வி.கே புதூர் அருகே கீழ வீராணம் பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவர் அவரது தந்தையின் பெயரில் வி.கே புதூரில் உள்ள நிலத்திற்கு மின் கம்பம் வைப்பதற்கு ரூபாய் 24,000 பணம் செலுத்தி, இலவச விவசாய மின் இணைப்பு வாங்கியுள்ளார். இந்த மின் இணைப்பு சம்பந்தமாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வி.கே புதூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இளநிலை பொறியாளர் பிரேம் ஆனந்த் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவசாய இலவச மின் இணைப்பிற்கு மீட்டர் வைக்க வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது.
தென்காசி: விவசாய இலவச மின் இணைப்பிற்கு ரூ.7,000 லஞ்சம்: வசமாக சிக்கிய இளநிலை பொறியாளர்!