இதையும் படிக்க: விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி
இதற்கு பதிலளித்துப் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, “தெருநாய் கடித்து உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். நாய்கள் கடித்து மாடு உயிரிழந்தால் ரூ. 37,500; ஆடு உயிரிழந்தால் ரூ. 6000; கோழி உயிரிழந்தால் ரூ. 200 இழப்பீடு வழங்கப்படும். முன்னதாக வழங்கப்பட்டதை தற்போது இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.” என்றார்
தொடர்ந்து பேசிய அமைச்சர் நேரு, “தெருநாய்கள் கடித்து மரணம் அடைந்த 1,149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ. 42 லட்சம் இழப்பீட்டுத்தொகை விரைவில் வழங்கப்படும். ” என்றார்.
பேரிடர் நிவாரண நிதி, முதலமைச்சர் பொது நிவாரண நிதி ஆகியவற்றிலிருந்து இந்த இழப்பீடுத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பெரிய சாமி தெரிவித்துள்ளார்.