தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை எதிர்த்து சென்னையில் நடந்த பேரணி! | Animal rights activists rally against the order to confine stray dogs in shelters

1373431
Spread the love

சென்னை: தெரு நாய்​களை காப்​பகங்​களில் அடைக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை எதிர்த்து சென்னையில் நேற்று விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் பேரணி​யாகச் சென்​றனர்.

தெரு நாய்​களின் எண்​ணிக்​கை​யைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில் டெல்​லி​யில் உள்ள தெரு​நாய்​கள் அனைத்​தை​யும் பிடித்து காப்​பகத்​தில் அடைக்​கு​மாறு உச்ச நீதி​மன்​றம் அண்​மை​யில் உத்​தர​விட்​டிருந்​தது. இதற்கு விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். அந்த உத்​தர​வுக்கு எதிர்ப்பு தெரி​வித்து திருச்​சி​யில் பேரணி​யும் நடை​பெற்​றது.

இந்​நிலை​யில், தெரு நாய்​களை காப்​பகத்​தில் அடைக்​கும் உத்​தர​வுக்கு எதிர்ப்பு தெரி​வித்​து, விலங்​கு​கள் நல அமைப்​பு​களைச் சேர்ந்த விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் 500-க்​கும் மேற்​பட்​டோர் சென்​னை, புதுப்​பேட்டை லாங்ஸ் கார்​டன் சாலை​யில் இருந்து பேரணி​யாகப் புறப்​பட்​டு, எழும்​பூர் வழி​யாக ராஜரத்​தினம் விளை​யாட்​டரங்​கம் வரை சென்​றனர்.

பின்​னர் பேரணி​யில் பங்​கேற்ற விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் கூறிய​தாவது: தெரு நாய்​களை காப்​பகங்​களில் அடைப்​பது தீர்​வா​காது. அவற்​றுக்கு கருத்​தடை செய்​வது மட்​டுமே தீர்​வாகும். நகர்ப்​புறங்​களில் திருட்​டைத் தடுப்​ப​தில் தெரு நாய்​கள் முக்​கிய பங்​காற்​றுகின்​றன. தெரு நாய்​களும் நம்மை போன்ற உயி​ரினம்​தான். அதற்​கும் இந்த உலகில் வாழ உரிமை இருக்​கிறது.

நாய்​களிடம் அணுகத் தெரி​யாதவர்​கள் தான் நாய்​களைக் கண்டு அஞ்​சுகின்​றனர். அளவற்ற அன்​பை​யும், விசு​வாசத்​தை​யும் அவை மனிதர்​களுக்கு வழங்​கு​கின்​றன. அதனால் இவற்றை காப்​பகத்​தில் அடைக்​கும் நடவடிக்​கை​யைக் கைவிட வேண்​டும்.

ரேபிஸ் நோய் தொற்று ஏற்​பட்ட நாய்​கள், பலரை கடிக்​கும் நாய்​களை காப்​பகங்​களில் அடைப்​ப​தில் எங்​களுக்கு எந்த ஆட்​சேபனை​யும் இல்​லை. ரேபிஸ் நோய் தாக்​கப்​பட்ட தெரு நாயை கருணைக் கொலை கூட செய்​யுங்​கள். குரலற்ற தெரு நாய்​களை காப்​பகங்​களில் அடைத்து அவற்றை துன்​பப்​படுத்​த வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *