இதையும் படிக்க: சொல்லப் போனால்… இல்லாத தரவுகளும் செல்லாத சாதனைகளும்
தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை
இது தொடர்பாக தேசிய பேரிடா் மீட்புப் படை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சுரங்கப் பாதைக்குள் செல்வதற்கு இஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டன. சுரப்பாதையின் வாயிலிருந்து 13.5 கி.மீ. வரை பயணித்தோம். இடிந்து விழுந்த கடைசி 200 மீட்டர் பகுதி முற்றிலும் இடிபாடுகளால் மூடப்பட்டுள்ளது.
இதனால் சிக்கிய தொழிலாளர்களின் நிலை அல்லது அவர்கள் உள்ள சரியான இடத்தை உறுதிப்படுத்துவது கடினமாகவுள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மூலம் கடைசி தூரம் வரைச் சென்றோம். ஆனால் எங்களால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
இடிபாடுகள் அகற்றப்படும்வரை பாதிக்கப்பட்டவர்களின் இருக்கும் இடத்தை எங்களால் கண்டறிய முடியாது. 11 கி.மீ. முதல் 13 கி.மீ. வரை தண்ணீரால் சூழப்பட்டுள்ளது, தற்போது அந்நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இப்பணிகள் முடிந்ததும் மீட்புப் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.