தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.44,000 கோடி விடுவிப்பு: மத்திய அரசு

dinamani2F2024 062Fcb291116 ef66 4a11 8815 09137fcb6ed52FP 3597816611
Spread the love

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21 தொடங்கியுள்ள நிலையில், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சௌகான் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று(ஜூலை 22) அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பொருத்தவரையில், 2024-25 நிதியாண்டில் ரூ. 86,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இவ்வளவு அதிக நிதி இதுவரை ஒதுக்கப்பட்டதில்லை. அடுத்த நிதியாண்டிலும் ஊரக வேலைவாய்ப்புகளை ஊக்கப்படுத்த இத்திட்டத்துக்கு ரூ. 86,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *