தேசிய லோக் – அதாலத் மூலம் ரூ.719 கோடி இழப்பீடு: ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு | Compensation through National Lok Adalat

1376401
Spread the love

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று நடை​பெற்ற தேசிய லோக்​-அ​தாலத்​தில் ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.718.74 கோடி இழப்​பீடு வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு சார்​பில் தேசிய லோக்​-அ​தாலத் தமிழகம் முழு​வதும் நேற்று நடை​பெற்​றது. மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு தலை​வரும், உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யு​மான எம்​.எம்​.வஸ்​தவா அறி​வுறுத்​தலின்​படி, மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு செயல் தலை​வரும் மூத்த நீதிப​தி​யு​மான எம்​.சுந்​தர் மேற்​பார்​வை​யில் நடத்​தப்​பட்ட இந்த லோக்​-அ​தாலத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் 6 அமர்​வு​களும், உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் 3 அமர்​வு​களும் ஏற்​படுத்​தப்​பட்டு நிலுவை வழக்​கு​கள் விசா​ரிக்​கப்​பட்​டன.

அதன்​படி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் பி.பி.​பாலாஜி, கே.​ராஜசேகர், என்​.செந்​தில்​கு​மார், ஜி.அருள்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன் மற்​றும் ஓய்​வு​பெற்ற நீதிபதி பி.கோகுல்​தாஸ் தலை​மை​யிலும், உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் நீதிபதிஆர்​.பூர்​ணிமா மற்​றும் ஓய்​வு​பெற்ற நீதிப​தி​கள் ஜி.சொக்​கலிங்​கம், எஸ்​.ஆனந்தி ஆகியோர் தலை​மை​யிலும் வழக்​கு​கள் விசா​ரிக்​கப்​பட்​டன. இதே​போல மாவட்ட மற்​றும் தாலுகா நீதி​மன்​றங்​கள் என மொத்​தம் 501 அமர்​வு​கள் ஏற்​படுத்​தப்​பட்டு 90,892 நிலுவை வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டன. இதன்​மூலம் மொத்​தம் ரூ.718.74 கோடிக்கு பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு இழப்​பீட்டு தொகையை வழங்​கு​வதற்​கான காசோலைகள் வழங்​கப்​பட்​டன.

கோவை, திருப்​பூர் மாவட்​டங்​களில் நடை​பெற்ற லோக்​-அ​தாலத்தை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்​தி​ரா​வும் விழுப்​புரம், கள்​ளக்​குறிச்சி மற்​றும் திரு​வண்​ணா​மலை மாவட்​டங்​களில் நடை​பெற்ற லோக்​-அ​தாலத்தை நீதிபதி எம்​.தண்​ட​பாணி​யும் திருநெல்​வேலி, தூத்​துக்​குடி மற்​றும் தென்​காசி மாவட்​டங்​களில் நடை​பெற்ற லோக்​-அ​தாலத்தை நீதிபதி ஜி.கே.இளந்​திரையனும் சிறப்பு பார்​வை​யாளர்​களாக மேற்​பார்​வை​யிட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு இழப்​பீட்​டுத் தொகையை வழங்​கினர்.

சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள சிறு வழக்​கு​களுக்​கான நீதி​மன்​றத்​தில் நடை​பெற்ற தேசிய லோக்​-அ​தாலத்​தில் 1,026 வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, ரூ.53.01 கோடி இழப்​பீட்​டுத் தொகை பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு வழங்​கப்​பட்​டது. இந்​நிகழ்​வில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன், சிறு வழக்​கு​களுக்​கான நீதி​மன்ற தலைமை நீதிபதி ஏ.நசீர்​அகமது, தொழிலா​ளர் நீதி​மன்ற முதன்மை நீதிபதி டி.லிங்​கேஸ்​வரன், மாவட்ட சட்ட உதவி ஆலோ​சனை மைய செய​லா​ளர் எஸ்​.பி.க​வி​தா, சிறு வழக்​கு​கள் நீதி​மன்ற பதி​வாளர் பி.​திவ்யாதயானந்த் மற்​றும் வழக்​கறிஞர் ஆர்​.​ராஜேஷ்கு​மார் மவுரியா உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர்.

இதே​போல மாநிலம் முழு​வதும் நடந்த இந்த லோக்​-அ​தாலத்ஏற்​பாடு​களை மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு உறுப்​பினர் செயலரும், மாவட்ட நீதிப​தி​யு​மான எஸ்​.​பால​கிருஷ்ணன்​ தலை​மை​யில்​ மாவட்​ட நீதிப​தி​கள்​ செய்​திருந்​தனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *