தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு | Assembly adjourned without specifying a date

1380131
Spread the love

Last Updated : 18 Oct, 2025 06:41 AM

Published : 18 Oct 2025 06:41 AM
Last Updated : 18 Oct 2025 06:41 AM

1380131

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைக் கூட்​டம் கடந்த அக்​.14-ம் தேதி தொடங்கி முதல்​நாளில் மறைந்த உறுப்​பினர்​களுக்கு இரங்​கல் குறிப்​பு, கரூர் சம்​பவத்​தில் இறந்த 41 பேர் மறைவுக்கு இரங்​கல் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. அக்​.15-ம் தேதி இந்த நிதி​யாண்​டுக்​கான முதல் துணை பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அன்று கரூர் சம்​பவம் தொடர்​பாக விவாதம் நடை​பெற்​றது.

அக்​.16-ம் தேதி துணை பட்​ஜெட் மீதான விவாதம் நடை​பெற்​றது. நிறைவு நாளான நேற்​று, விவாதத்​துக்கு நிதி​யமைச்​சர் பதி​லுரை அளித்​தார். 16 மசோ​ தாக்​கள் தாக்கல் செய்​யப்​பட்டு நிறைவேற்​றப்​பட்டன. பின்​னர் பேரவை மீண்​டும் கூடும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்​திவைப்​ப​தற்​கான தீர்​மானத்​தை, அவை முன்​னவர் துரை​முரு​கன் கொண்டு வந்​து, குரல் வாக்​கெடுப்பு மூலம் நிறைவேற்​றப்​பட்​டது. இதையடுத்​து, பேரவை மீண்​டும் கூடும் தேதி அறிவிக்​கப்​ப​டா​மல் ஒத்​திவைக்​கப்​படு​வ​தாக பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு அறி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *