அப்போது, வருகிற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட சீட் பெற்று தருவதாகவும் அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என சொல்லியுள்ளார். நாகலிங்கம் கொடுப்பதாக சொல்லியதும் மூன்று கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது.
தொடர்ந்து முன்பணமாக ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் அபுதாஹிர் என்பவரிடம் ஆசிஃப் ராஜா கூறியது போல் நாகலிங்கம் வழங்கியுள்ளார். அந்தப் பணத்தை பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கிடம், அபுதாஹிர் கொடுத்துள்ளார்.

திமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்த நிர்வாகிகளுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வந்த நிலையில், நாகலிங்கத்திற்கு மட்டும் அழைப்பு வராமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த நாகலிங்கம், இது குறித்து அபுதாஹிரிடம் கேட்டுள்ளார். அதற்கு, பணத்தை கார்த்திக் என்பவர் பெற்று சென்று விட்டதாக கூறிய அபுதாஹிர், அதன் பிறகு முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நாகலிங்கம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்