கோவை காளப்பட்டி பகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “திமுக எம்.பி தயாநிதி மாறன், கோயம்புத்தூர் மக்கள் அவர்களை சுற்றியுள்ள அனைவரையும் கெடுத்து விடுவார்கள் என்று கூறுகிறார்.
2021 தேர்தலில் ஆட்சி அமைத்த திமுக கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெறவில்லை. அந்த கோபத்தில் இப்படி பேசுகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் இந்த பகுதியில் 325 ஸ்பின்னிங் மில்கள் மூடப்பட்டுள்ளன. மின் கட்டண உயர்வு இங்குள்ள குறு சிறு நிறுவனங்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.